Friday, March 29, 2024

காலமானார் கலைஞர் : கண்ணீரில் கரையும் தமிழகம்!!

Share post:

Date:

- Advertisement -

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி 2016 ம் ஆண்டு முதல் உடல் உடல் ஒவ்வாமையால் அவதிப்பட்டு வீட்டிலிருந்தபடியே சிகிச்சையுடன் ஓய்வும் எடுத்து வந்தார்.

இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு செயற்கை சுவாசம் பொருந்தப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் அவருக்கு உடல் அவருக்கு நலிவுற்று ரத்த அழுத்தம் குறைந்து சிறுநீரக தொற்றும் காய்ச்சலும் ஏற்பட்டது.

இதனால் 27 ம் தேதியன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையின் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

11 நாட்கள் தொடர்ந்து மருத்துவர்களின் சிகிச்சையில் இருந்து வந்த கலைஞர் உடல்நிலையில் அவ்வப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது.

இருப்பினும் நேற்று மாலை 6.30 மணியளவில் கலைஞரின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியானது.

இந்த மருத்துவ அறிக்கையில் அவருடைய உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பதில் மருத்துவர்களுக்கு சவாலாகவே உள்ளதாகவும் மேலும் 24 மணி நேரத்திற்கு பிறகு தான் உடல்நிலை பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

எனினும் இன்று மாலை 4.30 மணியளவில் மீண்டுமொரு மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கலைஞரின் உடல்நிலை கடந்த சில மணி நேரங்களாகவே கவலைக்கிடமுடன் உள்ளதாக குறிப்பிட பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தீவிர சிக்கிச்சை கண்காணிப்பு பிரிவில் இருந்த திமுகவின் முன்னால் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் சற்று முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 96.

இச் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த திமுகவினர் காவேரி மருத்துவமனை முன் கதறி அழுது கொண்டிருக்கின்றனர்.

இதனால் சென்னை மாநகரம் முழுதும் பெரும் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...