அதிரை பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் காலமானதால் பொதுமக்கள் அனைவரும் ஆழ்ந்த சோகத்தில் இருக்கின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் இன்று மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் தமிழகம் முழுவதும் கொந்தளித்துக்கொண்டு இருக்கின்றது.
இந்நிலையில் அதிரை பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி மௌன அஞ்சலி செலுத்துகின்றனர்..
இதில் தி.மு.க நகர செயலாளர் ராம குணசேகரன், துணை செயலாளர் அன்சார் கான், தில்லை நகர், ஒன்றைய சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் மறைக்க k. இத்ரிஸ், அவை தலைவர் j. j. சாஹுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி பா.கு. பகுருதீன் மற்றும் இன்பநாதன், முன்னாள் சேர்மன் S.H. அஸ்லம், பேரூர் இளைஞர் அமைப்பாளர் சாஹுல் ஹமீது, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் கோடி நாகராஜ், த.மா.கா. M.M.S. அப்துல் கரீம், மேலும் அனைத்து வார்டு செயலாளர். முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்..