திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, அண்ணா சமாதிக்கு வலதுபுறம் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் அண்ணா சமாதி வந்துள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.