Home » பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலசங்க கோரிக்கையை ஏற்றது இரயில்வே நிர்வாகம்….!

பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலசங்க கோரிக்கையை ஏற்றது இரயில்வே நிர்வாகம்….!

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு நேரம் நீட்டிக்கப்படுகிறது.

பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் காலை 8.00 மணிமுதல் மதியம் 01. 00மணி வரை இயங்கி வந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்தது. இன்று 13.08.2018
திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 08.00 மணிமுதல் இரவு 08.00 மணிவரையிலும், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 08.00 மணிமுதல் மதியம் 02.00 மணி வரையிலும் முன் பதிவு மையம் இயங்கும் என இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோரிக்கையினை ஏற்று முன் பதிவு நேரத்தை நீட்டிக்க ஏற்பாடு செய்த இரயில்வே நிர்வாகத்திற்கு பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன் நன்றி தெரிவித்துள்ளார்.

 

 

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter