நாடெங்கும் 72 ம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதிரையில் பள்ளி,கல்லூரி, அரசு அலுவலகங்கள் போன்ற பல்வேறு இடங்களில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக அதிரை மேலத் தெரு பெரிய ஜும்ஆ பள்ளி ஆட்டோ நல சங்கம் சார்பாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் M.M.S.சேக்நசுருதீன் தேசியக்கொடியை ஏற்றினார்.
பின்னர் அதிரை நகர ஆட்டோ சங்க கௌரவ தலைவர் ஜபருல்லாஹ் சிறப்புரை நிகழ்த்தினார்.
விழா முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.