1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் நாள் வெள்ளையர்களிடம் பெற்ற நம் சுதந்திரத்தை பேணிப் பாதுகாக்கும் பொருட்டு நாடு முழுதும் சுதந்திர கொண்டாட்டம் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆமிர் கலீமி அரபிக் கல்லூரியில் நாட்டின் 72 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்க்கு கல்லூரியின் முதல்வர் ஜனாப்.முஹம்மது உபைதுர் ரஹ்மான் சிராஜி அவர்கள் கொடியேற்றினார்.
இதன் பின்னர் கல்லூரியின் பேராசிரியர் ஜனாப்.உஸ்மான் பாக்கவி இந்தியாவின் சுதந்திரமும், அதற்கு பாடுபட்ட இஸ்லாமியர்களும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழத்தினார்.
இந்தியச் சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு என்கிற கருத்தரங்கமும் கல்லூரியின் முன்னால் மாணவர் யூசுஃப் அன்சாரி தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்கக்கது.
தகவல் மற்றும் புகைப்படங்கள்,
அதிரை.