இந்திய தேச விடுதலையின் 72ஆம் ஆண்டை நாடெங்கிலும் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகிறோம்.
ஆனால் பொருளாதாரத்தை ஈட்ட வேண்டும், அதன் முலம் நம் நாட்டிற்கு அந்நிய செலவானியை அள்ளித்தர வேண்டும் என்ற நோக்கோடு புலம்பெயர்ந்து ஏனைய நாடுகளின் பணியாற்றும் இந்தியர்களின் நிலை மிகவும் கவலைக்குறியது.
மலேசிய உணவகம் ஒன்றில் பனியாற்றும் இந்திய இளைஞன் இன்று அந்நாட்டு கொடியினை ஏந்தி பிடிக்கிறான் இன்று !
அரபு தேசத்தில் வாழும் இந்தியன் ஒரு நம்மை அடிமைபடுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரின் காரை துடைக்கிறான்.
இது ஒருபுறமிருக்க நல்ல பணிகளில் இருப்போரும் நம் தேச விடுதலை நாளில் யாரோ ஒருவனுக்கு அடிமைபட்டிருக்கிறோம் என்பதை கண்டிப்பாக உணவர்.
நாட்டை காக்க வந்த நல்லவர்களில் மெகா நடிகனாக உள்ள மோடி, பல்வேறு நாடுகளில் சுற்றினாலும் இது போல் அடிநிலை தொழிலாளர்களின் நலன் குறித்து வாய் திறக்கவில்லை !
பல்வேறு ஒப்பந்தங்களில் இந்தியாவுடன் இணைத்துக்கொள்ளும் இந்திய அரசு அயல் நாடுகளில் பணியாற்றி இந்தியாவுக்கு அந்நிய செலாவணியை அள்ளித்தரும் தொழிலாளர்களின் சுதந்திரத்தில் மோடி அரசுக்கு கிஞ்சிற்றும் அக்கரையில்லை என்பதையே இது காட்டுகிறது.
நாட்டின் உண்மை குடிமக்கள் பல நாடுகளில் அடிமைப்பட்டிருப்பதை நல்ல குடிமக்களாகிய நாம் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள இயலாது.
எனவே இந்திய அரசு இந்தியாவின் இரு முக்கிய நிகழ்வாகிய குடியரசுதினம், சுதந்திர தினம் ஆகியவைகளில் அயல் நாடுகளில் பணியாற்றும் இந்திய ஊழியர்களுக்கு அந்தந்த தூதரகங்கள் மூலம் முறையிட்டு விடுப்பு பெற்றுத்தர வேண்டும் என்பதே நமது அதிரை எக்ஸ்பிரஸ்சின் வேண்டுகோள்.
–ஆக்கம்: அதிரை புதியவன்.