Home » அதிரையில் கேரள மக்களுக்கு நிதி திரட்டிய சமுதாய அமைப்புகள்!!

அதிரையில் கேரள மக்களுக்கு நிதி திரட்டிய சமுதாய அமைப்புகள்!!

by admin
0 comment

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவிற்கு பலத்த மழை பெய்து வருகிறது.

இம் மழையினால் சாலைகளிலும் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது மட்டுமல்லாமல் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு உயிர் பலிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் கேரள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

கேரள மக்களுக்காக தமிழகம் முழுவதிலும் பொருளுதவி, நிதியுதவி போன்றவைகள் சமூக அக்கறை கொண்டவர்கள், இயக்கங்கள் மூலமாக திரட்டப்பட்டு வருகிறது.

இன்று அதிரையில் ஜும் ஆ தொழுகைக்குப் பிறகு ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் கேரள மக்களுக்காக நிதியுதவி கேட்டு சமுதாய இயக்கங்களான தமுமுக, எஸ்டிபிஐ, தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நிதி திரட்டினர்.

இந்த நிதி திரட்டலுக்கு அதிரையர்கள் முழு ஒத்துழைப்பும், தங்களால் இயன்ற உதவிகளையும் செய்தது குறிப்பிடதக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter