திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் முத்துப்பேட்டை அருகேயுள்ள நாச்சிக்குளத்தை சேர்ந்த ஈஸ்வர் என்கின்ற மாணவர் சாலைவிபத்தில் சிக்கிக்கொண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சியில் உள்ள கடைத்தெரு வீதியில் சனிக்கிழமை(18/08/2018) மாலை தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபொழுது எதிர்பாராத விதமாக சாலைவிபத்தில் சிக்கிக்கொண்டர்.
இதில் ஈஸ்வர் பலத்த காயமடைந்து திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தனது மகன் விபத்தில் சிக்கிக்கொண்ட செய்தியை கேட்டு குடும்பத்தினர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து குறித்து பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.