இஸ்லாமியர்களின் புனிதமிக்க பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பெருநாள் நேற்றைய தினம் உலகத்தின் பல பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதிரையர்கள் பணிநிமித்தமாக இருந்துவரும் வளைகுடா,ஐரோப்பிய நாடுகளில் அதிரையர்கள் அனைவரும் சந்தித்து தங்களுக்குள் வாழ்த்து கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதை போன்று மலேசியாவில் அதிரையர்கள் ஹஜ்ஜுப் பெருநாளை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மேலும் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டதோடு புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.