Friday, March 29, 2024

அதிரையில் கஞ்சா விற்ற கயவன் கையும் களவுமாக பிடிபட்டான் !

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் பள்ளி மாணவர்களிடம் கஞ்சா விற்ற முதியவரை தமுமுகவினர் மடக்கி பிடித்தனர்.

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் தொண்டியை சேர்ந்த சுல்த்தான் என்பவர் அவ்வப்போது பேருந்து நிலையத்தில் வந்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலம் விற்பனை செய்யபடுவதாக தமுமுகவினருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து ரகசிய நோட்டமிட்ட இளைஞர் அணியினர் கஞ்சா விற்ற முதியவர் சுல்த்தானை கையும் களவுமாக பிடித்தனர் அப்போது கஞ்சா வாங்கி கொண்டிருந்த இளைஞர்கள் ஓட்டம்பிடித்தனர்.

இதன் பின்னர் தமுமுக அலுவலகத்தில் அவருடம் நடத்திய விசாரணையில் அதிரையில் இளைஞர்கள், மாணவர்கள் தம்மிடம் தொடர்ந்து கஞ்சா வாங்கிவருவதாகவும், இதில் வயது வித்தியாசமின்றி அனைவரும் வாங்கியுள்ளனர் (சில இளைஞர்களின் அடையாளத்தையும் கூறியுள்ளார்) என தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சேகர்,பெரியசாமி, சேகரின் அம்மா செல்லம் ஆகியோர் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்து மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் வேளையில் இம்முதியவர் சிக்கி கொண்டது குறிப்பிடதக்கது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...