Home » முத்துப்பேட்டை பேரூராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டத்திற்கு அழைப்பு..!

முத்துப்பேட்டை பேரூராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டத்திற்கு அழைப்பு..!

0 comment

பாலைவனமாக மாறிய முத்துப்பேட்டை!

முத்துப்பேட்டை குளங்களுக்கு நீரநிரப்ப பொதுமக்கள் பல மனுக்கள் கொடுத்தும் கண்டுகொள்ளாத பேரூராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் வருகின்ற 07.09.2018 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் முத்துப்பேட்டை பேரூராட்சி அருகில் நடைபெற உள்ளது.

இதில் கருத்தப்பா சித்திக் (அ.ம.மு.க. நகர துணை செயலாளர்) அவர்கள் தலைமை தாங்க உள்ளார்.

அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவராகிய பி.ஆர்.பாண்டியன் அவர்கள் கண்டன உரையாற்ற உள்ளார்.

இதில் நாச்சிக்குளம்.தாஜுதீன் (மாநில செயலாளர் ம.ஜ.க), ஜே.ஷேக்பரித் (காங்கிரஸ் விவசாய அணி-மாநிலப்பொதுச்செயலாளர்) இவர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

அ.முகம்மது மைதீன் (ஒன்றிய செயலாளர் ம.ஜ.க) அவர்கள் நன்றியுரை நிகழ்த்த உள்ளார்.

இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter