அதிரை பைத்துல்மால் அமைப்பின் ஆகஸ்ட் மாத மாதாந்திர கூட்டம் கடந்த 31-08-2018 வெள்ளிக்கிழமை இரவு அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் தலைவர் ஹாஜி பேராசிரியர் S. பர்கத் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஹாஜி O.K.M. சிபகத்துல்லாஹ் கிராஅத் ஓதினார். துணைத்தலைவர் ஹாஜி S.K.M. ஹாஜா முகைதீன் வரவேற்புரையாற்றினார். செயலாளர் ஹாஜி S.A. அப்துல் ஹமீது மாத அறிக்கை வாசித்தார்.
மேலும் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :
1. செயலர் ஹாஜி.ஜனாப் S.A. அப்துல் ஹமீது அவர்கள் மாத அறிக்கை வாசித்தார். அது ஏகமனதாக ஏற்பதாகத் தீர்மானிக்கப்பட்டது.
2. கூட்டுக் குர்பானித் திட்டத்தின் வெற்றிக்கு உதவிய அத்துனை பேருக்கும் நெஞ்சார நன்றியைத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வெளிநாட்டு கிளை நிறுவனங்களின் உதவியுடன் குர்பானித்திட்டத்தை மென்மேலும் வெற்றிபெற செய்ய வேண்டுகோள் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. வருடச் சந்தா செலுத்தாத நிர்வாகிகள் , உறுப்பினர்கள் வருடச் சந்தா செலுத்துமாறு வேண்டுகோள் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் 2018 ஆகஸ்ட் மாத சேவைகள் மற்றும் செயல்பாடுகள் :
இறுதியில் இணைப் பொருளாளர் ஹாஜி A. முகமது முகைதீன் நன்றியுரை வாசித்தார்.