Home » மாநில மாநாட்டில் பங்கேற்க மல்லிப்பட்டினத்திலிருந்து திருப்பூர் சென்ற மாற்றுத்திறனாளிகள் !

மாநில மாநாட்டில் பங்கேற்க மல்லிப்பட்டினத்திலிருந்து திருப்பூர் சென்ற மாற்றுத்திறனாளிகள் !

by admin
0 comment

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் 3ம் ஆண்டு மாநில மாநாடு திருப்பூரில் நடைபெறுகிறது. நாளை 2,3,4 ஆகிய தேதிகளில் திருப்பூர் ஹார்வி குமாரசாமி திருமண மண்டலத்தில் இம்மாநாடு நடைபெறுகிறது.

புதிய உரிமைகள் சட்டத்திற்கான விதிமுறைகளை வெளியிட்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்திட வேண்டும் , 40% ஊனமிருந்தாலே உதவித்தொகை தர வேண்டும் என்ற அரசாணை எண் 41-ஐ அமல்படுத்திட வேண்டும் , 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திரநாளிகளுக்கு உள்ள முன்னுரிமை அரசாணையை அமல்படுத்த வேண்டும் , தமிழக அரசுப்பணிகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மாற்றுத்திறநாளிகளை நிரந்தரமாக்க வேண்டும் என்ற அரசாணை எண் 51-ஐ அனைத்து துறைகளிலும் அமல்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை அமல்படுத்த வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் பட்டுக்கோட்டை கிளை சார்பில் இன்று காலை வேன் மூலம் திருப்பூர் புறப்பட்டுச் சென்றனர்.

 

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter