Friday, April 19, 2024

போலீஸ் டிஜிபி அலுவலகத்திலும் சிபிஐ ரெய்டு.. தேசிய அளவில் தமிழகத்திற்கு அவப்பெயர் !

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தையே உலுக்கிய குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் ரெய்டுகள் நடத்தி வருகின்றனர். டிஜிபி ராஜேந்திரன் வீட்டிலும் சிபிஐ ரெய்டு நடைபெற்றது.

இதனிடையே டிஜிபி அலுவலகத்தில் தற்போது ரெய்டு துவங்கியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக தலைமைச் செயலகத்தில் அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் துணை ராணுவத்தினர் உதவியுடன் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இப்போது ஒரு டிஜிபி அலுவலகத்தில் ரெய்டு நடந்து வருகிறது. மாநிலத்தின் மொத்த சட்டம் ஒழுங்கையும் காப்பாற்றக்கூடிய காவல் துறையின் உச்சபட்ச பதவிதான் டிஜிபி என்பது. ஆனால் அந்த அலுவலகத்திலேயே முறைகேடு தொடர்பாக சிபிஐ ரெய்டு நடத்தி உள்ளது, தமிழகத்திற்கு தேசிய அளவில் அவப்பெயரை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...