Home » நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!!

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!!

0 comment

கடந்த 5 வருடங்களில் இல்லாத அளவிற்கு பொருளாதார வீழ்ச்சிக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

விலைவாசி அதிகரித்ததால் மக்கள் அன்றாட தேவைகளுக்கு கூட திண்டாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மத்திய அரசு கலால் வரியை குறைக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் பலமுறை வலியுறுத்தியும் இதற்கு செவி மடுக்காமல் இருந்து வருகிறது.

இதனையடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை பாரத் பந்த் எனும் நாடு தழுவிய முழு அடைப்பு நடைபெற உள்ளது.

இந்த முழு அடைப்பிற்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

இதனிடையே புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து, நாளை பாரத் பந்த் எனும் முழு அடைப்பிற்கு புதுச்சேரி அரசு ஆதரவு அளிப்பதாகவும், மேலும் புதுச்சேரி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாகவும் அறிவித்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter