நெல்லை செங்கோட்டை மேலூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பல்வேறு இடங்களின் களிமண்னிலான விநாயகர் சிலை வைக்கப்பட்டது.
இந்நிலையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதியான மேலூர் பகுதியில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டது.
முன்னதாக கலவர நோக்குடன் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பயங்கர ஆயுதங்களுடன் ஊர்வலமாக இந்து முன்னணி குண்டர்கள் சென்றுள்ளனர்.
அப்போது இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் பூஜை ஊர்வலம் செல்ல அனுமதிக்குமாறு காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் இந்து முன்னனியினர் ஈடுபட்டதாக தெரிகிறது.
காவல் துறை தரப்பில் அனுமதிக்கப்பட்ட வழியாக மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும் என கண்டிப்புடன் கூறியுள்ளனர்.
இதனால்.ஆத்திரம் அடைந்த இந்து முன்னணி குண்டர்கள் அப்பகுதியில் இருந்த இஸ்லாமியர்களின் வணிக நிறுவனங்கள் உள்ளடக்கிய சொத்துக்க்களை அடுத்து துவம்சம் செய்துள்ளனர்.
இதில் அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமிய இளைஞரின் மண்டை உடைபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், காவல் துறையின் கவனக்குறைவால் தான் இந்த சம்பவம் அரங்கேறியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.