அதிரையில் அண்மைக் காலமாக பெருமளவில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திருத்துறைப்பூண்டி அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர்கள் அதிரையர் உட்பட 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இச் சம்பவம் நடந்து முடிந்த அடுத்த நாள் மீண்டுமொரு பைக் திருட்டு முயற்ச்சி அதிரை வண்டிப்பேட்டை – மதுக்கூர் சாலையோரம் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்றுள்ளது.
சாலையோரம் உள்ள ஒரு கடை சிசிடிவி டிவியில் பைக் திருட முயலும் திருடனின் காட்சிகள் பதிவாகியுள்ளது.
அதிரையில் அனைத்து இருசக்கர வாகனங்களையும் இயக்கும் வண்ணம் மாஸ்டர் கீ (Master Key) எனப்படும் சாவியை அதிகளவில் திருடர்கள் உபயோகித்து எளிதாக பைக் திருடுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால் அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் வசிப்பவர்கள் மிகக் கவனமாக இருக்க வலியுறுத்தப்படுகிறது.
உறங்கச் செல்லும் இரவு நேரங்களில் தங்களது இருசக்கர வாகனங்களை வீட்டினுள் பூட்டி வைப்பது தான் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.