Home » மணல் கொள்ளையில் ஈடுபடும் வாகனம் பறிமுதல் செய்யப்படும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு ..!!

மணல் கொள்ளையில் ஈடுபடும் வாகனம் பறிமுதல் செய்யப்படும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு ..!!

0 comment

மணல் திருட்டில் ஈடுபடும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மணல் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி பொதுநல வழக்கு ஒன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று(24/09/2018) விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், மணல் திருட்டில் ஈடுபடும் போது பிடிபடும் வாகனங்களை பறிமுதல் செய்யவேண்டும். மணல் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு அபதாரம் விதித்து, அந்த தொகையை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அவர்களிடம் திருப்பி ஒப்படைக்ககூடாது. மாட்டு வண்டியாக இருந்தாலும் கூட, மாடுகளை மட்டுமே உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும், வாகனங்களை ஒப்படைக்க கூடாது என, உள்துறை செயலாளர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter