தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஊராட்சியில் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படும் பணி நடைபெற்று வருகிறது.
மல்லிப்பட்டினம் இளைஞர்கள்,ஊராட்சி அலுவர் தெட்சினா மூர்த்தியிடம் மழைக்காலம் வரவிருப்பதால் மழைநீர் வெளியேறும் வகையில் கால்வாய்களில் உள்ள மண்,குப்பை,புதர் செடி ஆகியவற்றை அகற்றிட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனடிப்படையில் இன்று போர்கால அடிப்படையில் பொக்லைன் இயந்திரம் மூலம் கழிவு நீர் கால்வாய்களில் தங்கியுள்ள குப்பை,செடிகளை அகற்றி வருகின்றனர்.
மேலும் முறைகேடாக தண்ணீர் குழாய் இணைப்புகளை துண்டித்து வருவதாகவும் ஊராட்சி அலுவலர் நம்மிடம் கூறினார்.