தமிழகம் முழுவதும் பருவ மழை தொடங்க இருப்பதாலும், புதுப்பட்டிணம் பகுதிகளில் மழைபெய்து வருவதாலும் மழை,வெள்ள முன்னேற்பாடு பணிகளை அரசு அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர்.
புதுப்பட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடிகால் பகுதிகளை தூர்வாரி மழை நீர் கடலில் கலக்குவதற்கு ஏற்ற வகையில் அமைத்து,குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து குளோரினேசன் செய்தல்,பைப் லைன் பழுது நீக்கம் செய்தல்,நீர் குடியிருப்பு பகுதிகளில் புகா வண்ணம் மணல் மூட்டைகள் ஏற்பாடு, பேரிடம் பாதுகாப்பு மையங்கள் ஏற்பாடு உள்ளிட்ட பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை திட்ட இயக்குனர் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தார்.