அதிரையில் அவ்வப்போது மின் தடை வழக்கமாக ஏற்பட்டுக் கொண்டிருக்க, ஒவ்வொரு மாதமும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணத்தினால் மின் தடை செய்யப்படுகிறது.
நேற்றிரவு சுமார் 8.30 மணிக்கு தடை செய்யப்பட்ட மின்சார இணைப்பு நள்ளிரவு நேரம் ஆகியும் மின் இணைப்பு வராத காரணத்தினால் அதிரையர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து அதிரை மின்சார வாரியத்திற்கு தொடர்பு கொண்டால் முறையான பதிலேதும் தருவதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது போன்ற அறிவிப்பில்லா முறையற்ற தொடர் மின் தடைக்கு காரணம் யார் என்று மக்கள் மத்தியில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு வருகிறது.
பொது மக்களை நிம்மதியாய் தூங்க விடாமல், மெத்தனப்போக்கை கடைபிடித்து அயர்ந்து தூங்கும் அதிரை மின்சார வாரியம் விழித்தெழுவது எப்போது..?