சமீபகாலமாக உலகில் பிரசித்தி பெற்றுவரும் மியுசிகலி டிக்டாக், ஸ்முல் போன்ற செயலிகளால் பலரின் வாழ்க்கை கேள்விக் குறியாக மாறி வருகிறது என்கிறது ஒரு ஆய்வு !
குடும்ப பெண்களை நடுதெருவில் நிற்க வைக்கும் இந்த செயலிகளால் பலர் கூத்தாடிகளுடன் கரம் கோர்த்து தவறான வழிகளில் செல்வதாக நாளேடுகளில் செய்திகளாக வருகின்றன.
இந்த செயலிகளை அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி இளைஞர்கள் அதிகளவில் பதிவிறக்கம் செய்துள்ளனர், அதில் தங்களது நடிப்பு திறனை படம்பிடித்து இணைய வெளியில் உலாவ விடுகின்றனர்.
அவ்வகையில் கிடைக்கபெற்ற வீடியோ கிளிப்புகள் டிக்டாக்,ஸ்முல் போன்ற செயலி பக்கங்களில் உலாவி வருகிறது.
இதனால் அந்த இளைஞர்களின் எதிர்காலம் பாலாகும் வாய்ப்பு உள்ளது.
எனவே பெற்றோர்கள் தங்களின் செல்ல பிள்ளைகளின் ஆண்ட்ராய்டு, ஆப்பில் போன்களில் உள்ள தேவையற்ற செயலிகளை நீக்குவதுடன், தினமும் கண்காணிக்க வேண்டும்.
இல்லையேல் நமது பிள்ளைகளின் எதிர்காலம் சூனியமாகிவிடும் . எச்சரிக்கை..