பட்டுக்கோட்டை – தஞ்சை சாலையில் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இன்று பகல் பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சையை நோக்கி சென்ற தனியார் பேருந்தும் – தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு புறப்பட்ட தனியார் பேருந்தும் ஒரத்தநாடு உளூர் கிராமம் அருகே கடக்க முன்றபொழுது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இக்கோரவிபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
உளூர் கிராம வாசிகள் கூறுகையில் – பட்டுக்கோட்டை – தஞ்சை சாலையில் தனியார் பேருந்துகள் அரசு அனுமதித்த வேகா வரம்பை எட்டி அதிவேகமாக செல்கின்றது. அதுமட்டுமின்றி போட்டி போட்டு செல்கின்றனர் இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்லுபவர்கள் அச்சத்துடன் பயணம் செய்வதாக கூறியுள்ளனர்.