Home » பிலால் நகர் பகுதியை பார்வையிட்ட அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் நிர்வாகிகள்..!!

பிலால் நகர் பகுதியை பார்வையிட்ட அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் நிர்வாகிகள்..!!

0 comment

இன்று(19/10/2018) அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் நிர்வாகிகள் அதிராம்பட்டினம் பேரூராட்சி பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் அருகில் உள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சியை சேர்ந்த பிலால் நகர் பகுதியில் குப்பைகள் பராமரிப்பு, மழை நீர் வடியாமல் உள்ளது பற்றி ஆய்வு செய்தனர்.

பிலால் நகர் பகுதியில் பல இடங்களில் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. காலி மனைகளில் குப்பைகள் சேர்ந்துள்ளன. தொண்டு நிறுவனங்கள் வைத்திருக்கும் குப்பைத்தொட்டிகளில் குப்பைகள் அள்ளப்படவில்லை. தெர்மோகோல், மற்றும் டயர்களில் கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகியுள்ளன. ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், பொது மக்கள் இணைந்து இப்பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மழை நீர் வடிய வடிகால் வசதி செய்யப்படவேண்டும்.

தூய்மைப்பணி கோரிக்கையினை வலியுறுத்தி வருகிற வாரத்தில் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் செயல் அலுவலர் அவர்களை அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் நிர்வாகிகள் மற்றும் பிலால் நகர் பொதுமக்களுடன் இணைந்து புகார் மனு தாக்கல் செய்ய உள்ளோனர் வாய்ப்பு உள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம், தங்கள் அதிராம்பட்டினம் சுற்றச்சூழல் மன்றம் 90.4.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter