Home » அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் அதிரை பேரூராட்சிக்கு மனு..!

அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் அதிரை பேரூராட்சிக்கு மனு..!

0 comment

அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் கடைத்தெருவிற்கு அருகில் உள்ள மழை நீர் வடிகால் கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்ற ம் 90.4 கோரிக்கை. அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில்,கடைத்தெருவிலிருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலையை பொதுமக்கள், மாணவ, மாணவியர், வியாபாரிகள், பேருந்து நிலையம் செல்லும் பயணிகள், தொழுகைக்கு செல்வோர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையில் மருந்தகங்கள், வங்கி, மீன் மார்க்கெட், உணவு விடுதிகள், கடைகள், வழிபாட்டு தலங்கள், ஆகியவை உள்ளன. இச்சாலையில் ஓரத்தில் உள்ள மழை நீர் வடிகாலில் பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் சேர்ந்து அடைபட்டுவருவதால் ஸ்டேட் வங்கி அருகில் கழிவு நீர் சாலைகளில் ஓடி வருகிறது. இதனால் சாலை சேதமடைவதுவுடன், கழிவு நீரால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. தொழுகைக்கு செல்வோரின் உடல் மற்றும் ஆடைகள் மாசு பட்டு வருகிறது. எனவே உடனடியாக அதிராம்பட்டினம் பேரூராட்சி தற்காலிகமாக இந்த பகுதியில் உள்ள கால்வாயில் சேர்ந்துள்ள சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். வளர்ந்து வரும் குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்களை கணக்கில் கொண்டு சாலையின் இருபுறமும் அகலமான, பாதுகாப்பான, கான்கிரீட்டால் ஆன, மூடப்பட்ட, மழை நீர் வடிகால் கால்வாய்களை அமைக்க வேண்டும் என அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் கோரிக்கை மனு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter