Friday, April 19, 2024

சென்னையில் கடத்தப்பட்ட குழந்தை முஹம்மது சாது மீட்பு

Share post:

Date:

- Advertisement -

சென்னை ஆர்.கே.நகர் அருகே உள்ள நேதாஜி நகரில் நேற்று கடத்தப்பட்ட 3 வயது குழந்தை மீட்கப்பட்டுள்ளது.  கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் முகமது சாதுவை   கொடுங்கையூர் அருகே போலீசார் மீட்டனர். சிறுவனை தண்டையார்பேட்டையில் உள்ள கஸ்தூரி பாய் நகரில் போலீசார் மீட்டனர். தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் முகமது இலியாஸ் (24). இவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பகுதியில் சாலையோரத்தில் துணிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி பரகத் நிஷா (20). இவர்களுக்கு முகமது சாது என்ற இரண்டரை வயது மகனும், பிறந்து 15 நாளே ஆன பெண் குழந்தையும் உள்ளது.

முன்னதாக, நேற்று காலை வழக்கம்போல் முகமது இலியாஸ் கடைக்கு சென்றுவிட்டார். மதியம் 12 மணியளவில் வீட்டு முன் விளையாடிக்கொண்டிருந்த முகமது சாகீப் வெகுநேரம் ஆகியும் வராததால் பரகத் நிஷா வெளியில் வந்து பார்த்துள்ளார். அங்கு மகன் இல்லை என்றதும் அக்கம்பக்கத்து வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளார். ஆனால் யார் வீட்டுக்கும் குழந்தை செல்லவில்லை என்று தெரிந்தது.

இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில்  சிறுவன் முகமது சாகீபை கொடுங்கையூர் அருகே போலீசார் மீட்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...