191
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், காதிர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் அதிரை பேரூராட்சி சார்பில் கொசுமருந்து அடிக்கப்பட்டது.
டெங்கு மற்றும் மர்மக்காய்ச்சல் தமிழகத்தில் தற்போது பரவி வருகிறது. இதனால் ஆங்காங்கே பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
இந்த டெங்குவை தடுக்கும் நோக்கில் இன்று (28/10/2018) காலை அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பேரூராட்சி பணியாளர்களை கொண்டு பள்ளி வளாகம் முழுவதும் கொசுமருந்து அடிக்கப்பட்டது. இந்த ஏற்பாட்டை அதிரை பேரூராட்சியினர் செய்திருந்தனர்.