Home » புதுத்தெருவை கண்டுகொள்ளாமல் தூங்கி கொண்டிருக்கும் அதிரை பேரூராட்சி….!

புதுத்தெருவை கண்டுகொள்ளாமல் தூங்கி கொண்டிருக்கும் அதிரை பேரூராட்சி….!

by admin
0 comment

தமிழகம் முழுவதும் அரசு நிர்வாகம் டெங்கு,மலேரிய,பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ஆனால் அதிரை பேரூராட்சி நிர்வாகம் தன் கண் முன்னே படக்கூடிய,அதிகமான பொதுமக்கள் பயன்படுத்தி வரக்கூடிய, மருத்துவமனைகள்,வங்கிகள் என பல நிறுவனங்கள் இருக்க கூடிய பகுதியான புதுத்தெருவை புறக்கணித்து வருகிறது.சாலைகளில் நிரம்பி வழிந்தோடும் சாக்கடைக் கழிவுகள் மூலம் பலவித நோய் தொற்று உருவாகும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து அதிரை ரோட்டரி சங்க செயலாளர் மன்சூர் நம்மிடம் கூறியதாவது, சுகாதர சீர்கேட்டால் மிகவும் பாதிப்படைந்து வருகிறது புதுத்தெரு,இந்த பகுதியில் சாக்கடை கழிவுகள்,மோசமான சாலைகள் இவைகள் குறித்து தொடர்ந்து புகாரளித்த போதும் யாரும் இந்த பகுதியை கண்டுக்கொள்வதில்லை, வரக்கூடிய நாட்களிலாவது இதனை உடனடியாக சரிசெய்தால் நன்றாக இருக்கும் என்பது பொதுமக்களின் கோரிக்கை என்று கூறினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter