49
பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பி-யாக எஸ். கணேசமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கும்பகோணத்தில் டிஎஸ்பி-யாக பணியாற்றி வந்தார். தற்போது பணி மாறுதலாகி பட்டுக்கோட்டை வந்துள்ளார். புதிய டிஎஸ்பி-யாக நியமிக்கப்பட்ட இவர், புதன்கிழமை பொறுப்பெற்றுக் கொண்டார். ஏற்கனவே பட்டுக்கோட்டை டிஎஸ்பி-யாக இருந்து வந்த செங்கமலக்கண்ணன் கும்பகோணத்திற்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.