Home » அதிரை: நாற்றமெடுக்கும் சேவுதெரு ! அதிகாரிகளின் அலட்சியத்தால் நோய்பரவும் அபாயம் !

அதிரை: நாற்றமெடுக்கும் சேவுதெரு ! அதிகாரிகளின் அலட்சியத்தால் நோய்பரவும் அபாயம் !

0 comment

அதிராம்பட்டினம் 12வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான சேவு தெரு, புதுத்தெரு தென்புறத்தில் ஒரு பகுதியாக உள்ள இத்தெருவில் பேரூராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய் உள்ளன.

இதில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கழிவுநீர் குழாய்களை பொருத்தியுள்ளனர்.
இந்நிலையில் இக்கால்வாய் நிரம்பி நீர் செல்ல வழியில்லாமல் உள்ளன.

இதனால் கழிவு நீர்கள் சாலைகளில் மிக சுதந்திரமாக ஓடுகிறது.

இதுகுறித்து அப்பகுதி தன்னார்வலர்கள் சுமார் 25முறை புகார் மனு அளித்திருந்தும்,மெத்தனப்போக்காக அதிகாரிகள் உள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளன.

இதனிடையே அப்பகுதியை சேர்ந்த மூன்று சிறுவர்கள் கடுமையான காய்ச்சலில் பாதிக்கப்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்றும், இக்கழிவு நீரால் உயிர்ப்பழி ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை என்கிறார் அப்பகுதி வாழ் சமூக ஆர்வலர் ஒருவர்.

எனவே பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு சாலையில் ஓடும் கழிவு நீரை தடுத்து நோய் பரவாமல் காத்திட வேண்டும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter