குவைத் தலைநகர் குவைத் சிட்டியில் பேய் மழை பெய்து நகரமே ஸ்தம்பித்துப் போய் விட்டது. பேய் மழையால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்த நிலையில் அந்த நாட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் ஹஸ்ஸம் அல் ரூமி திடீரென ராஜினாமா செய்து விட்டார்.
சென்னையை மூழ்கடித்த வெள்ளமெல்லாம் ஒரு வெள்ளமா என்று கேட்கும் அளவுக்கு குவைத் சிட்டியை வெள்ளம் புரட்டிப் போட்டு விட்டது. அப்படி ஒரு பேய் மழையை குவைத் தலைநகரம் கண்டுள்ளது.
நகரின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளக்காடாகியுள்ளது. மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புப் படையினரும் களம் இறங்கியுள்ளனர்.
பெரும்பாலான பகுதிகளில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் மூழ்கி தத்தளித்ததைக் காண முடிந்தது. சாக்கடைகள் அடைத்துக் கொண்டு சாக்கடை நீரும் மழை நீருடன் கலந்து மக்களை அவஸ்தைக்குள்ளாக்கி விட்டது.
வியாழக்கிழமை மாலையிலிருந்து குவைத் சிட்டியில் மழை பெய்து வருகிறது. இது மேலும் மேலும் வலுத்துக் கொண்டே போனதால்தான் வெள்ளக்காடாகி விட்டது. வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source:- oneindia | எக்ஸ்பிரஸ் தமிழன்
வீடியோ :