Home » அதிரை புயல் பாதுகாப்பு மையத்தில் அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு !

அதிரை புயல் பாதுகாப்பு மையத்தில் அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு !

0 comment

தமிழகத்தை மிரட்டி வரும் கஜா புயலானது நாளை நாகை-பாம்பன் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் இந்த இரு இடங்களுக்கு இடைப்பட்ட ஊர்களில் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் ஒன்றான தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள அரசின் புயல் பாதுகாப்பு மையத்தை தமிழக அரசின் உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதில் தஞ்சை மாவட்ட பேரூராட்சிகள் துறை இயக்குனர் குற்றால்ஈஸ்வரன், உதவிசெயற்பெறியாளர் மாதவன், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ், துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், பணிமேற்பார்வையாளர் ராமலிங்கம், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடெசன் ஆகியோர் அந்த புயல் பாதுகாப்பு மையத்தை ஆய்வு செய்தனர். மேலும் அம்மையத்தில் குடிநீர் வசதி முறையாக செய்யப்பட்டுள்ளதா ? குடிநீர் முறையாக உள்ளதா ? கழிப்பறை வசதி முறையாக செய்யப்பட்டுளதா ? எனவும் ஆய்வு செய்தனர்.

You Might Be Interested In

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter