Home » கஜா புயல் நகரும் வேகம் அதிகரிப்பு..!!

கஜா புயல் நகரும் வேகம் அதிகரிப்பு..!!

0 comment

கஜா புயலானது நாளை மாலை கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கவுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று இரவு 8 மணி நிலவரப்படி சென்னை 430 கிமீ தொலைவிலும் நாகை 510 கிமீ தொலைவில் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மாலை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடலோர மாவட்டங்களான கடலூர்,நாகை,திருவாரூர், தஞ்சை,புதுக்கோட்டை, ராமேஸ்வரம் 20 செமீ மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி சென்னையிலிருந்து – ராமேஸ்வரம் செல்லும் ரயில் மற்றும் மதுரை வழியாக திருப்பதி செல்லும் ரயில் நாளை நவ 15 இரு மார்க்கமும் ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter