65
கஜா புயல் இன்னும் சற்று நேரத்தில் கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் இப்பகுதிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், 20 செ.மீ அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் புயல் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் என கண்டறியப்படும் தஞ்சை, நாகை, ராமநாதபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.