கஜா புயல் இன்று இரவு கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை அரசு பேருந்துகள் இயக்க வேண்டாம் என்று வருவாய் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.