Home » கஜா புயல் காரணமாக அதிரை புயல் மையம் காப்பகத்தில் 100 க்கும் மேற்பட்டோர் தங்கவைப்பு..!!

கஜா புயல் காரணமாக அதிரை புயல் மையம் காப்பகத்தில் 100 க்கும் மேற்பட்டோர் தங்கவைப்பு..!!

by
0 comment

கஜா புயல் எதிரொலியை அடுத்து கடலோரத்தில் வசிக்கும் மீனவ குடும்பங்களுக்கு மற்றும் குடிசை வீட்டில் வசிக்கும் பொதுமக்களுக்கு நேற்று காலை முதல் அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரை கடலூர் – பாம்பன் இடையே “கஜா” புயல் கரையை கடக்கவுள்ளது என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆதலால் பொதுமக்கள் தங்குவதற்கு அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதிரையில் அமைந்துள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் 100 க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அதேபோன்று வள்ளிகொள்ளை காட்டில் அமைந்துள்ள அரசு பள்ளிக்கூடத்திழும் 50 க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர் மற்றும் கீழத்தோட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.

இதில் இரவில் தங்குபவர்களுக்கு இரவு சாப்பாடு அத்தியாவசிய பொருட்கள் போன்ற அனைத்தும் தயாரான நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதற்கு தற்போதைய தாசில்தாராக அருள் ராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter