Home » கஜா புயல் : அதிரையை தாக்க வாய்ப்பு??

கஜா புயல் : அதிரையை தாக்க வாய்ப்பு??

by admin
0 comment

வங்கக் கடலில் நிலை கொண்ட கஜா புயல் தற்போது நாகப்பட்டினம் – வேதாரண்யம் இடையே கரையை கடந்துக் கொண்டிருக்கிறது.

இந்த கஜா புயலின் காரணமாக நேற்று புதுச்சேரி, காரைக்கால், தஞ்சாவூர், இராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளிக் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டது.

இதனையடுத்து கஜா புயல் கரையை கடக்கும் பொழுது வேதாரண்யம், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் காற்று 90 ல் இருந்து 120 கிமீ வரை வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

மேலும் இந்த கஜா புயல் கரையை கடந்த பின்னர், அதிகாலை அதிரை வழியாக வலுவிழக்க வாய்ப்பிருப்பதால் அதிரையிலும் கஜா புயலின் தாண்டவம் வெகுவாக இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இதனால் அதிரையர்கள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தீவிரப்படுத்தவும் ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ கேட்டுக் கொள்கிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter