தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம், பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (21/11/2018) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் கலந்துகொண்டு பேரிடர் காலங்களில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் எப்படி விரைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்தும் உரையாற்றினார்.
மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் எம். முஹம்மது சேக் அன்சாரி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் நஸ்ருதீன், ஜெ. முஹம்மது ரசின், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன், தஞ்சை மாவட்ட தலைவர் முஹம்மது அலி ஜின்னா, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர்கள் அஹமது நவவி, அபூபக்கர் சித்திக் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.