Home » மல்லிப்பட்டினத்தில் கஜா பாதித்த பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்கிய காங்கிரஸ் கட்சியினர் !

மல்லிப்பட்டினத்தில் கஜா பாதித்த பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்கிய காங்கிரஸ் கட்சியினர் !

0 comment

கஜா புயலால் தஞ்சை மாவட்டத்தின் கடலோர பகுதிகள் உருக்குலைந்து போய் உள்ளன. பலர் வீடுகளை இழந்தும், இருக்க இடமின்றியும் தவித்து வருகின்றனர். இன்னனும் கூட பல இடங்களில் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் இருக்கின்றனர். புயல் பாதித்த பகுதிகளில் மனிதநேயமிக்கவர்கள் தொடர்ந்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் இன்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வில் அகில இந்திய இளைஞர் காங்கிரசின் தேசிய செயலாளர் கே மகேந்திரன், காங்கிரஸ் நிர்வாகி அப்துல் ஜப்பார், ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் வட்டார ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். புயல் பாதித்த பட்டுக்கோட்டை வட்டத்தில் கே. மகேந்திரன் தொடர்ந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter