Home » நாடு முழுவதும் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை !

நாடு முழுவதும் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை !

0 comment

முறையான வழிகாட்டுதல் இன்றி தினமும் லட்சக்கணக்கான மருந்துகள் ஆன்லைன் மூலம் விற்கப்படுவதாகவும், டாக்டர்கள் பரிந்துரையின்றி இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வதால் நோயாளிகள் பலர் பாதிக்கப்படுவதாக டெல்லியை சேர்ந்த தோல் சிகிச்சை நிபுணர் ஜாகிர் அகமது என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும், அந்த மருந்துகளில் பெரும்பாலானவை முறையான அனுமதி பெறாதவை என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் இன்று இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஏற்கனவே மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு மற்றும் மனுதாரர் அளித்துள்ள ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, நாடு முழுவதும் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்ய தடை விதிப்பதாக உத்தரவிட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter