Wednesday, February 19, 2025

கொட்டும் மழையில் தமுமுகவின் கண்டன பொதுகூட்டமும், பல தீர்மானங்களும்..!

spot_imgspot_imgspot_imgspot_img


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் சார்பில் ரோஹிங்கிய முஸ்லிம்களின் படுகொலை மற்றும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் சுமார் 6:30மணிக்கு ஆரம்பம் ஆகி இரவு 10:00 மணியளவில் முடிவுபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் மழை பெய்த நிலையிலும் மக்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

விரிவான செய்தி:-
அதிரையில் இன்று(27/09/2017) புதன்கிழமை மாலை 6:00 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்,M.R. கமாலுதீன் அவர்கள் தலைமைதாங்கினார்,M. இத்ரீஸ் அஹமது அவர்கள் வரேவற்புரை ஆற்றினார்.
இந்த பொதுக்கூட்டம் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள்:-

1.ரோஹிங்கிய முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

2.நீட் தேர்வு விலக்கு அளிக்க கோரி தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

3.அதிரையில் அதிகமாக பரவும் டெங்கு காய்ச்சலுக்கு சுகாதார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் வைகப்பட்டது.

4.அதிரை ECR சாலையில் உள்ள சட்டவிரோத மதுபான கடையை மூடக்கோரியும் , அதற்க்கு நடவடிக்கை எடுக்க கோரியும் தீர்மானம் வைக்கப்பட்டது.

5.அதிரை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதியில் மிகவும் அமோகமாக நடைபெறும் லாட்டரி சீட்டு மற்றும் கஞ்சா போன்றவைகள் அமோக வியாபாரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

6.M.S.நகர் பகுதி மற்றும் பிலால் நகர் பகுதிகளில் சுகாதார சீர்கேடு மற்றும் தெருவிளக்கு எரியாதத்தை தக்க அலுவளர்க்கு தகவல் தெருவித்தால் டீ குடிக்க காசு இல்லை நாங்கள் எங்கே சரிசெய்வது என்பதை குறியும் அப்பகுதியில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறுதியாக தீர்மானம் வைகப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு S.அஹமது ஹாஜா,M.பாவாஸ் கான்,S.ஷேக் மொய்தீன்,M.ஜஃபருல்லாஹ்,S.S.முஹம்மது ஷேக்காதி,A.சலீம்,M.O.செய்யது முஹம்மது புஹாரி,R.செய்யது புஹாரி,R.M.நெய்னா முஹம்மது,S.முஹம்மது யூசுஃப்,S. சாகுல் ஹமீது, ல்J.அப்துல் ஹக்கீம்,Er. A.முஹம்மது இல்யாஸ்
முன்னிலை தங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில்
ப. அப்துல் சமது, (மாநில பொது செயலாளர்,மனிதநேய மக்கள் கட்சி) அவர்கள் கண்டன உரையாற்றினார்.

வழக்கறிஞர் I.M. பாதுஷா,
(மாநில அமைப்பு செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி)மற்றும்
பழனி பாரூக்,
(கழக பேச்சாளர்) ஆகியோறும் கண்டன உரையாற்றினார்கள்.

இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் மரைக்கான் (எ) அப்துல் கஃபூர்,
(U.S.A. த.மு.மு.க பொறுப்பாளர்) அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...

அதிரை : கூண்டோடு காலியான நாதக – ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில்...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பகுதியின் நாம் தமிழர் கட்சியினர் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்து கொண்டனர். நாம் தமிழர் கட்சியின் சீமான் பெரியார் குறித்த...

மமகவின் 17ம் ஆண்டு தொடக்கம் – அதிரை நகரம் முழுவதும் கொடியேற்றி...

மனிதநேய மக்கள் கட்சியின் 17ம் ஆண்டு தொடக்கத்தை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img