கடந்த 15 ஆம் தேதி அன்று அதிராம்பட்டினத்தில் கஜா புயல் அடித்தது இதனால் அப்பகுதியில் விவசாயிகளின் தென்னை மரங்கள், தங்களுடைய குடிசை வீடுகள் , மீனவர் படகுகள் முழுவதும் சேதம் அடைந்தது.
இந்நிலையில் தமிழக அரசு கஜா புயல் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை கண்டுகொள்ளவில்லை என்று மத்திய, மாநில அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று (15/12/18) சனிக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் அதிரை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் இறுதியாக மாவட்ட பெருளாளர் ஏ.ஜ. ஜியாவுதீன் கண்டன உரையறிக்கொண்டு இருக்கும் போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்கள் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களை கொச்சை வார்த்தையால் திட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் முடிவடைந்த பிறகு அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.