Home » அதிரை காவல் ஆய்வாளர் தியாகராஜனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் !

அதிரை காவல் ஆய்வாளர் தியாகராஜனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் !

0 comment

அதிராம்பட்டினம் காவல்நிலைய ஆய்வாளர் தியாகராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அதிரையில் இன்று மாலை 5
4.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிரை இந்தியன் வங்கி அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மஜக-வின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அப்துல் சலாம் தலைமை வகித்தார்.

இதில் அக்கட்சியின் மாநில பொருளாளர் ஹாருன் ரஷீது, மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் செல்லச்சாமி, மதுக்கூர் ராவுத்தர்ஷா, நாம் தமிழர் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் ஏ.ஜே. ஜியாவுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மஜகவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக மஜக-வின் அதிரை நகர செயலாளர் அப்துல் சமது நன்றி கூறினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter