Home » அதிரை: தலையில் விழுமுன் தற்காத்து கொள்ளுமா மின் வாரியம் ?

அதிரை: தலையில் விழுமுன் தற்காத்து கொள்ளுமா மின் வாரியம் ?

0 comment

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் 12வார்டுக்கு உட்பட்ட சாதுலியா தெருவில் (ஆஸ்பத்திரி தெரு) கஜாவினால் பழுதடைந்த மின் கம்பத்தின் அருகில் புதிய மின் கம்பம் மாற்றப்பட்டு இணைப்பை துரித கதியில் வழங்கியது மின் வாரியம்!

அதற்காக ஆயிரம் நன்றிகளை தெரிவித்து கொண்டாலும், பிட்டு பிசிரான வேளைகளை செய்வதிலுமா அலட்சியம் காட்டுவது?

மேற்காணும் படத்தில் இருக்கும் பழைய மின் கம்பத்தில் இருந்த இரும்பு கம்பிகளை அப்படியே விட்டு சென்றுள்ளனர் மின் வாரிய ஊழியர்கள்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த அப்பகுதியில் இருக்கும் இந்த மின் கம்பம் அருகே குடியிருப்பு வீடுகள் உள்ளன, பள்ளி கல்லூரிக்கு செல்லும் பாதையாக இருப்பதால் பாதசாரிகள் இவ்வழியில் செல்ல அச்சப்படுகின்றனர்.

எனவே மின் வாரிய அதிகாரிகள் அலட்சியம் பாராமல் பழைய மின் கம்பத்தை அகற்றி மக்களின் அச்சம் போக்க வேண்டும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter