Friday, April 19, 2024

மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இளைஞர்கள் !

Share post:

Date:

- Advertisement -

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தன்னார்வளர்களும், கட்சி சாரா நபர்களும், இளைஞர்களும் நிவாரண பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில் நாகை மாவட்டம் தோப்புத்துறையைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விழுந்தமாவடி கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தார்பாய் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளனர்.

அப்போது தோப்புத்துறை இளைஞர்களிடம் அப்பகுதி மக்கள் புயலால் கடுமையாக சேதமடைந்த தங்கள் கோவிலை தற்காலிகமாக சீரமைத்து தருமாறு கேட்டுள்ளனர். உடனே அந்த இளைஞர்களும் புயலால் பாதிக்கப்பட்ட அக்கோவிலின் மேற்கூரைக்கு தார்பாய் அமைத்து கொடுத்தனர்.

தோப்புத்துறை இளைஞர்களின் மதங்களை கடந்த இந்த மனிதநேயச் சேவையை பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

என்றென்றும் தொடரட்டும் இந்த சகோதரத்துவம் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...