அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகத்தின் மூத்த நிருபர்களில் ஒருவரான M.அஹமது ஆசிப் அவர்களின் திருமணம் இன்று (24-12-2018) திங்கட்கிழமை நடைபெற்றது.
முன்னதாக இத் திருமண விழாவை சிறப்பிக்க வருகை தந்தோர்களை நண்பர்கள் புடைசூழ குடும்பத்தினர்கள் வரவேற்று அவர்களை நன்கு உபசரித்தனர்.
பின்பு காலை 11 மணிக்கு அதிரையில் உள்ள செக்கடிப் பள்ளி வாசலில் அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் அஹமது ஆசிப் – ஆயிஷா சித்தீக்கா ஆகியோரின் திருமண ஒப்பந்தம் என்றழைக்கப்படும் நிக்காஹ் வைபவம் நடைபெற்றது.
நிக்காஹ் முடிந்த பின்னர் அஹமது ஆசிபிற்கு குடும்ப உறவுகளும், நண்பர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இருமணம் சேர்ந்தால் திருமணம் என்ற சொல்லுக்கு ஏற்ப இன்று திருமணம் எனும் தித்திப்பான பந்தத்தில் இணைந்திருக்கும் அஹமது ஆசிப் – ஆயிஷா சித்தீக்கா மணமக்களை “அதிரை எக்ஸ்பிரஸ்” செய்தி ஊடகம் மனமார வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகிறது.
நீங்களும் இம் மணமக்களை வாழ்த்தலாமே..