Home » அதிரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி !

அதிரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி !

0 comment

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 01/01/2019 செவ்வாய் கிழமை மாலை 5 மணியளவில் அதிராம்பட்டினம் பேரூந்து நிலையம் அருகில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் காவல் துறையினர் இணைந்து நடத்திய மாபெரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பொதுமக்களுக்கு சாலை விதிகளை கடைபிடிப்பது, வாகனத்தில் செல்லும் போது சீட்பெல்ட் அணிவது, செல் போன் பேசாமல் வாகனம் செலுத்துவது, தலைகவசம் அணிவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த பட்டது.இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு முகப்பு விளக்குகளுக்கு ஸ்ட்டிக்கர் ஒட்டப்பட்டு, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியினை அதிரை காவல்துறை ஆய்வாளர் தியாகராஜன் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியினை அதிரை ரோட்டரி சங்க தலைவர் Rtn.MK.முகமது சம்சுதீன் தலைமைதாங்கினார்,
ரோட்டரி சங்க செயலாளர்
,Rtn.Z.அகமது மன்சூர் மற்றும்
பொருளாளர்
Rtn.S.சாகுல் ஹமீது
தலைமைதாங்கினர்.உறுப்பினர்கள்,
Rtn.ஜமால் முகமது,
Rtn.சேக் அப்துல்லா
Rtn.வெங்கடேஸ்,
Rtn.முகமது பாரூக்,
Rtn.அன்வர் ரஹ்மான்
மற்றும் மாவட்ட பிரதிநிதிகள்
Rtn.வைரவன்
Rtn.கஜேந்திரன் மற்றும் காவல் துறை உதவி ஆய்வாளர்கள்
திரு.முருகானந்தம், பொன்னியின் செல்வன்,
தலைமை காவலர் திரு,செந்தில் குமார்,
தனிபிரிவு காவலர்
பிரதீப் ஆகீயோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter