Home » மல்லிப்பட்டிணத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம், அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள்…!

மல்லிப்பட்டிணத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம், அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள்…!

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் நியாய விலைக்கடையில் கட்டுங்கடங்காத மக்கள் கூட்டம்.

தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைக்கு பொங்கல் பரிசும்,ரூபாய் 1000ம் அறிவித்துள்ளது. ஜனவரி 8ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசுகள் வழங்கி தொடங்கி வைத்தார். மல்லிப்பட்டிணம் நியாய விலைக்கடையில் நேற்றிலிருந்து(ஜனவரி 10) இலவச பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டு வருகிறது.ஒரு நாளைக்கு முன்னூறு என்ற அடிப்படையில் வழங்கி வருகின்றனர்.மேலும் பெண்களின் கூட்டமும் மிக அதிகமாகவே காணப்படுகிறது.

இதனை தொடர்ந்து இன்று(ஜன 11) காலை 6 மணி முதலே மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கி உள்ளது.ஒன்பதரை மணி ஆன போதும் இதுவரை நியாயவிலைக் கடையை அதிகாரிகள் திறக்கவில்லை.

இதுகுறித்து நம்மிடம் மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த நிஜாம் தெரிவிக்கையில், இந்தக் கூட்டத்தை தவிர்க்க முன்கூட்டியே ரேசன் கடைகளை அதிகாரிகள் திறப்பதன் மூலமும்,பணத்தை வங்கியின் மூலம் செலுத்துவதன் மூலம் பெரும் கூட்ட நெரிசலை தவிர்த்து இருக்கலாம் என்று கூறினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter