கஜா புயல் நிவாரணம் கோரி திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சாலை மறியல் காரணமாக 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. முத்துப்பேட்டையில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை,அருகில் இருக்க கூடிய பகுதிகளுக்கெல்லாம் நிவாரணம் கொடுத்துள்ளனர்,ஆனால் முத்துப்பேட்டை பகுதியை அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றசாட்டுகின்றனர்.
இந்நிலையில் 200க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை எந்த அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்.